லிஃப்ட்டில் குழந்தையுடன் சிக்கி அலறிய 4 பேர் - போராடி மீட்ட திக்..திக்.. நிமிடம்

x

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் இயந்திர கோளாறால் 4 பேர் அரை மணிநேரமாக லிஃப்ட்டில் சிக்கித் தவித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையுடன் 4 பேர் லிஃப்ட்டை பயன்படுத்தி உள்ளனர். 4வது மாடியில் இருந்து லிஃப்ட் கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், லிஃப்ட் பாதியிலேயே நின்றது. அச்சத்தில் அவர்கள் கூச்சலிட்டதை அறிந்து, மருத்துவமனை ஊழியர்கள், லிஃப்ட் ஆப்ரேட்டர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்