உயிருக்கு போராடிய தம்பதி... காப்பாற்ற வந்த வாகனமும் சிக்கியது - இறுதியில் நடந்த சோகம்

x

கன்னியாகுமரி அருகே செப்டிக் டேங்க் உடைந்து விழுந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீட்க வந்த தீயணைப்புத்துறை வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஒட்டலிவிளை பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தின் செப்டிக் டேங்க் உடைந்ததில், மோகன்தாஸ் - சுஜிஜா என்ற தம்பதி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதனிடையே, இவர்களை மீட்க வந்த தீயணைப்பு வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர கால்வாயில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில், சுஜிஜா உயிரிழந்த நிலையில், அவரது கணவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்