கனியாமூர் பள்ளி விவகாரம் - பெற்றோருடன் அவசர சமாதான கூட்டம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி திறப்பது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் அவசர சமாதான கூட்டம் நடைபெற்றது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை அடுத்து, அங்கு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டு, தீ வைத்து கொளுத்தபட்டு சேதமடைந்தது. மேலும் சேதமடைந்த பள்ளியில் சீரமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருப்பதால் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பள்ளியை திறக்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பள்ளி திறப்பது குறித்து கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் பெற்றோர்களுடன் அவசர சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓரிரு வாரங்களில் பள்ளி சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்