பள்ளி குழந்தைகளுடன் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து..! மாணவர்களின் நிலை என்ன..?

x

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்திலிருந்த மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் பேருந்து ஒன்று, 9 மாணவர்களை ஏற்றிக் கொண்டு தெங்கியாநத்தம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த ஒரு மாணவரும், பெண் நடத்துநரும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்