கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் - நீதிமன்றத்தில் சரண் அடைந்த இளைஞர்

x

கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர், விருத்தாசலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி வேப்பூர் அருகே நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேவேந்திரன் ஆஜரானார்.

பின்னர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் தேவேந்திரன் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்