#Justin|| கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் திடீர் பதற்றம்.. களமிறங்கிய பாம்ப் ஸ்குவாட்

x

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்போம்............


ப ஸ் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிய நபரால் பரபரப்பு

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை


சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை சந்தித்து விட்டார்

இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்

இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்