#JUSTIN | வியக்க வைக்கும் கிளைமேட் - கொடைக்கானலில் குவியும் மக்கள்

x

கொடைக்கானலில் வார விடுமுறையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள், இதமான கால நிலையை அனுபவித்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி.

கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் வார விடுமுறையான இன்று தமிழகமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது, மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து காற்று வீசுவதால் குளுமையான கால நிலை நிலவுகிறது, இந்த இதமான கால நிலையை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து ரோஜா பூங்கா,மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர், மேலும் மலைப்பகுதியில் தவழ்ந்து செல்லும் மேக்கூட்டங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர், மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரியில் ஈடுப‌ட்டும் சுற்றுலாப்பயணிகள் வார விடுமுறையை கொண்டாடி வருகின்றனர், மேலும் வார விடுமுறையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் அனைவ‌ரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்