"அந்தரங்க வீடியோ எடுத்து பணம் பறிப்பு" - சிக்கிய 2 பிரபல பெண் யூடியூபர்கள்

x

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்த யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்திலிருந்து செயல்பட்டுவரும் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள், சமூக சேவைகளில் ஈடுபட்டுவருபவர்களின் அந்தரங்களை மறைமுக கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்டுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீசார், சென்னையை சேர்ந்த ஜெனிபர் தனம் மற்றும் மதுரையை சேர்ந்த தனலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதும், முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்