இரு சக்கர வாகனம் மீது ஜேசிபி மோதி விபத்து...17வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி | Accident

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஜேசிபி மோதிய விபத்தில்17 வயது சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்