ஜாதி, மதம், பேதம் இல்லாமல் கொண்டாடப்பட்ட ஜாம்பவானோடை தர்ஹா கந்தூரி விழா

x

முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை தர்ஹா கந்தூரி விழாவில், சந்தனக்கூடு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்ஹாவில், மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 721வது ஆண்டு கந்தூரிவிழா, கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாவது நாள் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று இரவு நடைபெற்றது. தர்ஹாவிலிருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு, ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதிகாலை 5 மணிக்கு தர்ஹாவை வந்தடைந்தது. கந்துரி விழாவையொட்டி, இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்