குடியரசு துணைத்தலைவராகிறார் ஜெகதீப் தன்கர் - அவர் பெற்ற வாக்குகள் எவ்வளவு...?

x

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதில், பாஜக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

780 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 725 பேர் வாக்களித்தனர்.

தேர்தல் முடிவுகளை மக்களவைச் செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான உத்பல் சிங் குமார் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்