"ஏதோ ஒன்றை இழப்பது போல் உள்ளது" - வெங்கையா நாயுடு உருக்கம்
நமது இந்திய பாரம்பரியத்திலும் கலாசாரத்திலும் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
அவருடைய பதவிக்காலம் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
அதில் பேசிய வெங்கையா நாயுடு, ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், நாடாளுமன்றமன்ற உறுப்பினர்களை விட்டு பிரிவது ஏதோ ஒன்றை இழப்பதுபோல் உள்ளது என்றார்.
எப்போது அவையை துவங்கினாலும் வணக்கம் கூறி அவையைத் தொடங்கியதை குறிப்பிட்ட அவர், நமது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருப்பதாகக் கூறினார்.
முன்னதாக பேசிய பிரதமர் மோடி, அவையைத் திறன் வாய்ந்ததாக எப்படி உருவாக்குவது, அவற்றில் சிறந்தவற்றை நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி கொண்டு செல்வது என்பதை அறிந்த ஒரே தலைவர் வெங்கைய்ய நாயுடு மட்டுமே என்று புகழாரம் சூட்டினார்.