தோனிக்கு இதுதான் கடைசி ஆட்டமா? - குழப்பத்தில் ரசிகர்கள்..!

x

சேப்பாக்கத்தில் இன்றைய போட்டி முடிந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என சென்னை அணி தெரிவித்து உள்ளது. கொல்கத்தா உடனான இன்றைய லீக் போட்டி, நடப்பு சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி ஆகும். இதனால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்னை அணி முடிவெடுத்து உள்ளது. போட்டி முடிந்த பிறகு வீரர்களின் கையெழுத்து இடப்பட்ட ஜெர்சி, கிளவ்கள், பந்துகள் உள்ளிட்டவை ரசிகர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்