பீறிட்டு வீணாக வெளியேரும் தண்ணீர்..தரமற்ற குழாய்களே காரணமா..?

x

ஐந்தாவது நீர் ஏற்று நிலையத்திற்கு செல்லும் ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறிய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்துக்கடவு அவிநாசி திட்ட பணிகள் நிறைவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் திட்டமானது விரைவில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்ற சோதனை ஓட்டம் முழுவதும் நிறைவு பெறாத நிலையில் ஏற்பட்டுள்ள இந்த உடைப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதுடன்., இதுகுறித்து உரிய சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர் மற்றும் பதிக்கப்பட்ட குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்