போதையில் வந்த அரசு அலுவலர்...பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - அதிரடி காட்டிய கலெக்டர்

x

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில், மது போதையில் பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மது போதையில் அலுவலகத்துக்கு வந்த திட்ட அலுவலர் கோபி, கணினி அறையில் இருந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறியடித்து ஓடினார்கள். சத்தம் கேட்டு வந்த பணியாளர்களும், பொதுமக்களும் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கோபியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்