மிரட்டும் மாண்டஸ்! - சென்னையில் அதிரடியாக மூடப்பட்ட பூங்காக்கள்

x

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று காலை முதல் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி. டிப்பர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்