கிரிக்கெட் மைதானத்தில் போடப்பட்ட வேப்பிலை புகை... TNPL போட்டியில் திடீர் பரபரப்பு - என்ன காரணம்?

கிரிக்கெட் மைதானத்தில் போடப்பட்ட வேப்பிலை புகை... TNPL போட்டியில் திடீர் பரபரப்பு - என்ன காரணம்?
x

கோவையில் கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த பூச்சிகளால் 15 நிமிடம் ஆட்டம் தடைபட்டது.கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16 வது போட்டி நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், சீசம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. போட்டியின் இடையே பூச்சிகள் வந்ததால் சில நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனிடையே பூச்சிகளை விரட்ட பக்கெட்டில் நெருப்பிட்டு வேப்பிலையுடன் புகை போட்டுக்கொண்டே 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைதானம் முழுவதும் வலம் வந்தனர். பூச்சிகள் குறைந்தவுடன் ஆட்டம் மீண்டும் துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்