இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி - ஏமாந்துபோன எதிரணி

x

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது.

டாக்காவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 227 ரன்களும் இந்தியா 314 ரன்களும் எடுத்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 145 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. எனினும் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும், தமிழக வீரர் அஸ்வினும் நிலைத்து நின்று ஆடி 71 ரன்கள் சேர்த்தனர். இதனால் 47வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா இலக்கை எட்டிய இந்தியா, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 42 ரன்கள் அடித்து கடைசிவரை அஸ்வின் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கனவே முதல் டெஸ்டில் வென்ற இந்தியா, இந்தப் போட்டியிலும் வென்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

--


Next Story

மேலும் செய்திகள்