ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - தொடரை கைப்பற்றியது இந்தியா

x

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 18 ஆம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 38 புள்ளி1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 25 புள்ளி 4 ஓவர்களில், 167 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்