வெறியோடு கத்திய வங்கதேச வீரர்கள்.. திரும்பி பார்த்து முறைத்த கோலி

x

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி கோபம் அடைந்தார். 2வது இன்னிங்சில் 22 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த கோலி, மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது, வங்கதேச வீரர்கள் கோலியை நோக்கி வெறித்தனமாகக் கத்தினர். வங்கதேச வீரர்கள் கோலியை கிண்டல் செய்யும் வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில், கோபம் அடைந்த கோலி வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனிடம் சம்பவத்தைக் கூறினார். தொடர்ந்து நடுவர்கள் குறுக்கிட்டு கோலியை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்