பார்படாஸை பந்தாடிய இந்தியா.. செமி ஃபைனலில் கெத்தான எண்ட்ரி - காமன்வெல்த்தில் அபாரம்..!

x

பர்மிங்ஹமில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியாவும் பார்படாஸும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜெமிமா 56 ரன்களும், சஃபாலி வெர்மா 43 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 163 ரன்கள் இலக்குடன் ஆடிய பார்படாஸ், இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துடன் இந்தியா ஆடவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்