விடாமல் பெய்த அடைமழை... ஆட்டத்தை மாற்றிய கோலி, சிராஜ் - டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா

x

விடாமல் பெய்த அடைமழை... ஆட்டத்தை மாற்றிய கோலி, சிராஜ் - டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் 255 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் 181 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 76 ரன்களை எடுத்த‌து. கடைசி நாளான நேற்று மழை குறுக்கிட்டதால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி சமனில் முடிந்த‌து. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரை 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்