புதிய நாடாளுமன்ற திறப்பு விழா - எல்லைகளை மூடும் பணி தீவிரம்..!

x

இன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளுக்காக டெல்லி மாநில எல்லைகளை மூடும் பணியில், காவல்துறையினர் ஈடுபட்டனர். பாஜக அமைச்சர் பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடைபெறும் என, மஹிலா பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாகவும், ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலும், எல்லை பகுதிகளை மூடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்