திடீரென டிரான்ஸ்பார்மரில் மோதிய லாரி-உயிர் பயம் இல்லாமல் ஆயிலை பிடித்த மக்கள்..!

x
  • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கழிவு அட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் மினி டிரான்ஸ்பார்மரில் சிக்கி விபத்துக்குள்ளானது.அவிநாசி பகுதியை சேர்ந்த மணிமுத்து என்பவர், மகாலட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அட்டை கம்பனியில் இருந்து, கழிவு அட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார். அப்போது, லாரி அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் சிக்கி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். முன்னதாக பொதுமக்களில் சிலர் ஆபத்தை உணராமல், டிரான்ஸ்பார்மரில் இருந்து வலிந்த ஆயிலை பிடித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்