யாசகர்களை தாக்கி கொள்ளை-சிக்கிய காங்.கட்சி பிரமுகர்கள் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!

x

குழித்துறை ரயில் நிலையம் அருகே, ஆந்திராவை சேர்ந்த ராமன்ஜி அவரது மனைவி லட்சுமி மற்றும் உறவினர் சாவித்ரி என 3 பேர், வாடகைக்கு வீடு எடுத்து, யாசகர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 5 ம் தேதி, மது போதையில் இருந்த 3 இளைஞர்கள், அவர்களது வீட்டில் அத்துமீறி நுழைந்து, சரமாரியாக தாக்கிவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாக்குதல் சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு நேரில் வந்து வாக்குமூலம் பெற்றபின்பு, அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்யாமல் இருந்து வந்தனர். தாக்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்யகேட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காவல்நிலையம் முன்பு காத்திருந்து வந்ததை தொடர்ந்து, சடையன்குழி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் அபிஷாந்த், பெனீஷ் மற்றும் வினீத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்