விடுதி மாணவர்களுக்கு பரவிய நோய்...அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

கிருஷ்ணகிரியில் ஒரே விடுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சரும நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தாசினாவூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 55 மாணவர்கள் மஹாராஜகடை உயர்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் இந்த 55மாணவர்களில் சுமார் 30 பேருக்கு கை ,கால், வயிறு போன்ற பகுதிகளில் சரும நோய் பாதிக்கப்பட்டு புன்கள் ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்