நைசா பேசி சைசா ஆட்டைய போட்டு... கொலை மிரட்டல் விடுத்த 'ஒத்த ரோசா'... மொத்தத்தையும் இழந்தவர் எடுத்த விபரீத முடிவு...

x

சின்னசேலம் அருகே நைனார் பாளையம் பகுதியை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் கோமதி என்ற பெண்ணிடம் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அதனைப் பயன்படுத்தி, ரமேஷிடம் இருந்து பல்வேறு காரணங்களைக் கூறி, 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 13 சவரன் நகையை, கோமதி ஏமாற்றி வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கோமதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்து வந்ததை அறிந்த ரமேஷ், கொடுத்த பணம் மற்றும் நகையை திரும்பக் கேட்டுள்ளார். அப்போது, மேலும் 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் பிள்ளைகளைக் கொன்றுவிடுவேன் என்றும் ரமேஷை கோமதி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த ரமேஷ், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் தனது மனைவிக்கு அனுப்பிய ஆடியோவில், தற்கொலைக்குக் காரணம் லோகநாதன், கோமதி மற்றும் அவரது மகன் ஸ்ரீதர் என தெரிவிக்கப்பட்டிருந்து. இதுதொடர்பான புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக கோமதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்