கள்ளச்சாரய விவகாரம்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்

x

கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடைகள் மூலம், ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியது மட்டுமல்லாமல், கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் அரசு செயலிழந்து நிற்கிறது என்று விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருவதன் மூலமாக, இத்தனை நாட்களாக, அரசுக்குத் தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்தார்கள் என்பதை அரசே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த துயர சம்பவத்திற்குக் காரணமான அனைவர் மீதும், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்