பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்..? இளைஞரை ஓட ஓட வெட்டி கொலை - செங்கல்பட்டில் பயங்கரம்

x

சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர், இரவு 10-மணியளவில் இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், மனோகரனை வழிமறித்து அறிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனால், இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மனோகரன் தப்பி ஓடினார். பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்கமாக பதுங்கியிருந்த நிலையில், பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்த‌து. இதில் சம்பவ இடத்திலேயே மனோகரன் உயிரிழந்தார். தகவலறிந்து சென்று சென்ற போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்