நீர்த்தேக்கத் தொட்டியில் உடும்பு.. வனத்துறையினர் செய்த செயல்

x

கடையம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த உடும்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ஏ.பி.நாடானூர் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஊராட்சி ஊழியர்கள் சென்ற நிலையில், அதில் உடும்பு சிக்கி இருப்பதை கண்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பாக மீட்கப்பட்ட உடும்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்