"கடை நடத்த வேண்டுமென்றால் மாமூல் தர வேண்டும்" - தர மறுத்த‌தால் இரும்பு கம்பியால் தாக்கிய ரவுடிகள்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாமூல் தராததால் மளிகைக் கடைக்கார‌ர் மற்றும் அவரது தம்பியை 4 ரவுடிகள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது வீட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு பக்கத்து ஊரான ஏனாதியை சேர்ந்த இளைஞர்கள் சென்று, தாங்கள் ரவுடிகள் என்றும், கடை நடத்த வேண்டுமென்றால் மாமூல் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், மாமூல் தர முடியாது என பிரகாஷ் கூறியதால் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பிரகாஷையும், அவரது தம்பி செந்திலையும் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் 4 பேரும் தப்பியோடினர். காயமடைந்த 2 பேரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்