ஹெல்மெட் அணியாவிடில் ஜன.27 முதல் வழக்குப்பதிவு... கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

x

கோவையில் வரும் 27-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அன்றைய தினம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்