ATM-ல் எடுத்த பணம் வீட்டிற்கு சென்றால் மாயம்.. சைக்கிள் கேப்பில் அபேஸ்..

x

திருப்பரங்குன்றம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் திருடப்பட்டது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர், வங்கியில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது, திருநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஜூஸ் குடிக்க சென்றார். பின்னர், வீடு திரும்பும் போது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த திருநகர் போலீசார், 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்