"யாருக்கும் பாரமா இருக்க விரும்பல.. யார் வீட்டுக்கும் வர மாட்டேன்" -கண்கலங்க வைத்த பார்வையற்ற பாட்டி

x

"யாருக்கும் பாரமா இருக்க விரும்பல.. நான் யார் வீட்டுக்கும் வர மாட்டேன்" - கண்கலங்க வைத்த பார்வையற்ற பாட்டி

பார்வைக் குறைபாடுள்ள மூதாட்டியை மனிதாபிமானமற்ற முறையில் உறவினர்கள் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முத்தம்மாள் என்ற மூதாட்டியை கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரது உறவினரான திருமலைச்செல்வி நெல்லைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மூதாட்டியை அந்த பெண், தனியாக விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சியினர் மூதாட்டியை மீட்ட நிலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, உறவினர்கள் தன்னை ஏமாற்றியதாக நெல்லை மாநகர கமிஷனரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அந்த பணத்தை மூதாட்டிக்கு செலவு செய்து விட்டதாக திருமலைச்செல்வி கூறி உள்ளார். இதனையடுத்து மூதாட்டி காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூதாட்டி அழுது புலம்பினார். இந்த சம்பவம் அங்குள்ளவர்களை கண்கலங்க வைத்தது. இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்