"ரூ.15 ஆயிரம் வேணும்.." - லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து அலுவலர் - சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பெண்

x

வீட்டுவரி ரசீது பெற 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, அரசு அலுவலர்கள், இளம் பெண்ணிடம் லஞ்சம் கேட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அடைக்கலம் என்ற இளம் பெண், தனது வீட்டிற்கு வீட்டு வரி ரசீது கேட்டு, பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியுள்ளார். அதற்து பஞ்சாயத்து அலுவலர் பெல்பீன் என்பவர், முதலில் 30 ஆயிரம் வரை பணம் கேட்டு, தற்போது 15 ஆயிரம் வரை கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மரிய அடைக்கலம் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ பதிவை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்