"1 மணி நேரமா டிரெயினுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.." ரயில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அவதி

x

சென்னை சைதாப்பேட்டையில், புறநகர் மின்சார ரயிலில் இருந்து எட்டு பெட்டிகள் கழன்றதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. 12 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் மீண்டும் புறப்படும் போது, முதல் நான்கு பெட்டிகளின் இணைப்பு கேபிள் அறுந்தது. இதையறிந்த ஓட்டுநர், ரயிலை சாதுர்யமாக நிறுத்தியதால், பின்னால் கழன்ற எட்டு பெட்டிகளில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக, இரண்டு மணி நேரம் அனைத்து ரயில் நிலையங்களிலும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர், சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அனைவரையும் விரைவு ரயில்களில் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே, பழுதடைந்த ரயில் பெட்டிகளை தாம்பரம் பணிமனைக்கு கொண்டு சென்று, அவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்