மலேசியவில் கணவர் குத்திக் கொலை..."Please Sir அப்பாவ வர வைங்க" - உடலை கேட்டு கண்ணீர் மல்க மனு அளித்த குடும்பம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெங்கராயபாளையம் புதுகாலனி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மலேசியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்றுள்லார்... அங்கு பணியாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் பாண்டியன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்... அந்நிறுவனத்தின் தமிழ்நாட்டு உரிமையாளர் ராஜசேகர், பாண்டியனின் மனைவி வளர்மதிக்கு கணவர் இறந்த செய்தியைக் கூறியுள்ளார்... அதிர்ச்சி அடைந்த வளர்மதி, கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுத்து, கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என வளர்மதி தன் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் அழுதுகொண்டே மனு அளிக்க வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஷ்ரவன் குமார் உறுதியளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்