ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்! மனைவியின் முடிவால் அதிர்ச்சி - பம்மல் பகுதியைச் சூழ்ந்த சோகம்

x

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்! மனைவியின் முடிவால் அதிர்ச்சி - பம்மல் பகுதியைச் சூழ்ந்த சோகம்

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே, ஆன்-லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ஞானசெல்வன் - வகிதா ப்ளோரா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஞான செல்வன் ஆன்-லைனில் ரம்மி விளையாடி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த வகிதா, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் மனமுடைந்த அவர், வீட்டு அறையில் உள்ள மின் விசிறியில், புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ஞானசெல்வன் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, கதவை உடைத்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்-லைன் ரம்மி விளையாட்டால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்