கிரேன் உதவியுடன் வெட்டப்பட்ட பெரிய மரம்... மரத்தின் பாரம் தாங்காமல் கவிழ்ந்த கிரேன் - சமூக வலைதளங்களில் பரவும் செல்போன் காட்சிகள்

x

கேரள மாநிலம் கொல்லத்தில், வீட்டின் முன் உள்ள பெரிய மரத்தை வெட்டியபோது, வீட்டின் மீது மரம் விழாமல் இருக்க, கிரேன் மூலம் பிடித்துக் கொண்டு வெட்டப்பட்டது.

அப்போது மரத்தின் பாரத்தை தாங்க முடியாமல், கிரேன் கவிழ்ந்தது.

இதில் கிரேன் ஓட்டுநருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், கிரேன் மீது அமர்ந்திருந்த இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.

கிரேன் கவிழ்ந்து விழும் செல்போன் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்