தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க.. கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை..

x

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக கடலோர பாதுகாப்பு படை போலீசார், சாகர் கவச் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்பவனோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று, மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் படகை சோதனை செய்தனர். முத்துப்பேட்டை நகர்ப்பகுதிகளிலும் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்