ரவுடியின் இறுதிச் சடங்கில் பயங்கரம்.. நண்பரின் தலையில் கல்லைபோட்டு கொலை - மதுபோதையில் விபரீதம்

x

சென்னை பழையை வண்ணாரப்பேட்டையில், ரவுடியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த நபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முன்னாள் ரவுடியான கருப்பு குமார் என்பவர், 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கருப்பு குமாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த நண்பரான ராஜசேகர் என்பவர், மதுபோதையில் வந்துள்ளார். அப்போது, கமலக்கண்ணன் என்பவருக்கும், ராஜசேகருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், ராஜசேகரின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், கமலக்கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வடசென்னை பகுதியில் கடந்த 2 நாட்களில், அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்