போராட்டம் செய்த பெண்களை உயிருடன் புதைத்த கொடூரம் - பதறவைக்கும் காட்சிகள்

x

ஆந்திராவில் தனது வீட்டுமனையை ஆக்கிரமித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது உயிருடன் மண்ணைக் கொட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களின் வீட்டு மனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் வீட்டு மனையை திரும்ப தரக்கோரி 2 பெண்களும் 2019 ஆம் ஆண்டு முதல் போராடி வந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும் போது டிராக்டரில் அங்கு வந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் அகியோர் இரண்டு பெண்கள் மீதும் மண்ணை கொட்டி உயிருடன் கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்