பெண் காவலரை ஆபாசமாக கண்டபடி பேசி தாக்கிய கொடூர கும்பல்...வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்

x

வேலூரில், பெண் காவலரை ஆபாசமாக பேசி தாக்கிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு பகுதியை சேர்ந்த கீதா என்பவர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்தபோது, மேல்கொத்தகுப்பம் புதுமனையை சேர்ந்த சத்தியமூர்த்தி, குணசேகரன், பிரபாகரன், தினகரன் ஆகிய 4 பேர், கீதாவிடம் வேண்டுமென்றே தகராறு செய்து தாக்கினர். தற்போது, பெண் காவலரிடம் 4 பேரும் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்