குமரியில் கோர விபத்து.. 3 வயது குழந்தையுடன் தாய் தந்தை தூக்கி வீசப்பட்டு பலி

x

குழித்துறை அருகே நடந்த வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூட்டப்புளி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், தனது மனைவி சுபிஜா, மூன்று வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். கல்லுகெட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அருள்ராஜ், அவரது மனைவி, குழந்தை ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்