மணப்பாறை அருகே காதல் மனைவியை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்யக்கோரி அவரது கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

x

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அளிஞ்சிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கிருபாகரன் .

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர், அழககவுண்டம்பட்டியை சேர்ந்த சிவரஞ்ஜினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் குறித்து பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து, கிருபாகரன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுக்குறித்து பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சமாதானம் பேசுவது போல் காதலன் கிருபாகரனின் வீட்டிற்கு சென்ற சிவரஞ்சனியின் பெற்றோர், அப்பெண்ணை வற்புறுத்தி தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் கிருபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனைக்கு ஆளான கிருபாகரன், புத்தானத்தம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தனது காதல் மனைவியை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்