மனைவி சென்ற ஹெலிகாப்டர் விபத்து..கூட்டத்தால் உயிர் தப்பிய கணவன் - கேதார்நாத் பயங்கரம்

x

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவி அவரது மனைவி கலா உள்ளிட்டோர் கேதார்நாத் பகுதியில் உள்ள கோயிலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று பகல் 12 மணியளவில், ஹெலிகாப்டரில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கலா மட்டும் அதில் பயணித்துள்ளார். அப்போது நிகழ்ந்த விபத்தில் கலா உள்பட 7 பேர் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார். ரவி அதில் பயணம் செய்யாததால் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பியுள்ளார். பனி மூட்டமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்