"மொத்தமா போச்சு"...அடித்து துவைத்த கனமழை...அவதிக்குள்ளான மக்கள்

x

சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக காந்தி மைதானத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பழமையான மரம் ஒன்று சாய்ந்ததில், மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. அதேபோல் மரங்கள் விழுந்து மைதானத்திலிருந்த கழிவறையும் சேதமடைந்துள்ளது. இதனிடையே மைதானத்தில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்