பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்

x

சான்டா கதரினா மாநிலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி ஒருவரும், மின்சாரம் தாக்கி மற்றொருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்த தீயணைப்பு வீரரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் பல பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் சாலை போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் பரானா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்