இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!

x

சென்னையில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.

நேற்று முதலே கடுங்குளிருடன் வாடைக்காற்றும் வீசி வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. இதனிடையே, சென்னை ஸ்நோ என்ற ஹேஸ்டேக்கும், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்