வரும் 20,21 ஆம் தேதிகளில் , இந்த இந்த மாவட்டங்களில் கனமழை?

x

வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 19ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்கள், மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''

வரும் 20ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவையில் அநேக இடங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 21ம் தேதி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், தென் கிழக்கு வங்கக்கடலிலும்,

இன்றும் நாளையும் அந்தமான் கடலிலும், நாளை தெற்கு வங்கக்கடலிலும்,

வரும் 19ம் தேதி அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலிலும்,

வரும் 19 முதல் 21ம் தேதி வரை, இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்